சாதிவாரி கணக்கு எடுக்க திமுக-வுக்கு என்ன பயம் . பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

by Staff / 09-12-2023 12:39:57pm
 சாதிவாரி கணக்கு எடுக்க திமுக-வுக்கு என்ன பயம் . பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசுக்கு என்ன பயம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்; மாநில அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனைத்து உரிமையும் உள்ளது, சமூகநீதி என்றாலே சாதிவாரி கணக்கெடுப்புதான் அடித்தளம் என்றும் அதனை நடத்தாமல் கைகழுவி விடுவது சமூக அநீதி என்றும் தெரிவித்தார் . தமிழகத்தில் கடைசியாக 1931ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் திமுகவுக்கு என்ன பயம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via