எஸ். பி. வேலுமணி கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

by Staff / 11-10-2023 04:39:43pm
எஸ். பி. வேலுமணி கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் காரமடை பகுதி குளங்களில் நீர் நிரப்ப வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி கோரிக்கை விடுத்தார். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அதிமுக அரசு தொடங்கிவைத்தது என எஸ். பி. வேலுமணி கூறினார். எஸ். பி. வேலுமணியின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், அத்திக்கடவு திட்டம் கொண்டுவந்தது அதிமுக தான்; ஆனால் நிதி அளிக்கவில்லை.அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. காளிங்கராயன் அணையில் இருந்து நீர் கிடைத்தவுடன் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார். அத்திக்கடவு அவினாசி திட்டம் 2ம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via