மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம் மதுராந்தகம் நபர் கைது

by Staff / 02-01-2023 05:22:15pm
மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம் மதுராந்தகம் நபர் கைது

செங்குன்றம் அடுத்த சோழவரத்தைச் சேர்ந்தவர் டெய்சி, 42; தனியார் ஓட்டல் ஊழியர். இவருக்கு, அதே ஓட்டலில் பணியாற்றிய நபரின் வாயிலாக, மதுராந்தகத்தைச் சேர்ந்த சுரேஷ், 51, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.டெய்சி அவருக்கு, மகளிர் குழு வாயிலாக லோன் வாங்கி கொடுத்துள்ளார். அவர் பணத்தை சரியாக செலுத்தாததால், டெய்சி கண்டித்துள்ளார்.இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் சுரேஷ், மொத்த பணத்தையும் கட்டுவதாக கூறி, சோழவரம் பெரியார் நகரில், தான் தங்கியுள்ள அறைக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற டெய்சிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சுரேஷ் பாலியல் பலாத்காரம் செய்து, அதை அவரது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.பின், அதை காட்டி மிரட்டி அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டியுள்ளார். இதற்கு டெய்சி மறுக்கவே, வீடியோவை டெய்சியின் மகனுக்கு அனுப்பி உள்ளார்.இது குறித்து, கடந்த 5ம் தேதி, டெய்சி அம்பத்துார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரித்த போலீசார், ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த சுரேஷை, நேற்று காலை மொபைல் போன் டவர் வாயிலாக, நேற்று ரெட்டேரியில் சுற்றிவளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via