நேபாளத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

by Admin / 04-11-2023 09:38:00am
நேபாளத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நேபாளத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது .இதன் காரணமாக டெல்லி மற்றும் அருகில் உள்ள நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.. ரிக்டர் அளவுகோலில்5. 6.[11.32-3.11.2023] ஆக நிலநடுக்கம் இருந்ததாகவும் நேபாளத்தில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் தோன்றியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.. நிலநடுக்கத்தின் அளவு இருக்கிற அளவுகோலின் படி5. 6  டெல்லி அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.. இது குறித்தான காணொளி காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது .இது மூன்றாவது முறையாகும். கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி ஒரு மணி நேரத்திற்குள் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது 4.6 ஆக இருந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து நிமிடங்களில் 6.2 ஆக உயர்ந்திருந்தது 2015 ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 லிட்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8,000 அதிகமானோர் இறந்ததும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காயம் அடைந்ததும் அறியத்தக்கது.

 நிலநடுக்கத்தை தொடர்ந்து நேபாள பிரதமர் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்களை கண்டறிவதற்காக ராணுவ ஹெலிகாப்டரில் இடங்களை பார்வையிட சென்றுள்ளார்.

நேபாளத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
 

Tags :

Share via