ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணியினை குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

by Staff / 05-04-2023 05:29:44pm
ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணியினை குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையின் சார்பில் துவாரகாபதி கடற்கரை         பகுதியில் இன்று (05. 04. 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. என். ஸ்ரீதர், இ, ஆ. ப. , அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு. இளையராஜா, இ. வ. ப. , அவர்கள் முன்னிலையில் ஆமைக்குஞ்சுகளை கடலில் சேர்க்கும் பணியினை கடற்கரையினை சுத்தப்படுத்தும் பணியினையும் துவக்கி வைத்து, தெரிவிக்கையில்: -
கன்னியாகுமரி மாவட்டம், துவாரகாபதி பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் கடல் ஆமை முட்டைகள் பொரிப்பகத்தில்  கடற்கரை மணலில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து, அவ்வாறு சேகரிக்கப்பட்ட முட்டைகள் பொரிப்பதற்கு, அதனின் தட்பவெப்ப நிலையினை சோதித்து அறிந்து அதற்கேற்றவாறு மணலில் குழிகள் அமைத்து, ஆமை முட்டைகளை 45 நாட்கள் முதல்                60 நாட்கள் வரை தேதி வாரியாக பாதுகாப்பாக வைத்து முட்டைகள் பொறிக்க வசதிகள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில், கடந்த வருடம் 5993 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில்   3708 ஆமை குஞ்சுகள் பொரித்து கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. இந்த வருடம் 9491 ஆமை முட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டதில் தற்போது வரை     1673 ஆமை குஞ்சுகள் பொரித்து கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. இந்த ஆமைக்குஞ்சுகளை கடலில் விடுவதால், மீன்வளம் பெருகுவதற்கு வழிவகை செய்வதோடு, கடல் நீரை தூய்மைப்படுத்தவும் மிகவும் உதவியாக இருக்கும். இன்றையதினம சேகரித்து வைக்கப்பட்ட ஆமை முட்டைகளில் பொரித்து வெளி வந்த 120 ஆமை குஞ்சுகis கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்தார்கள்.முன்னதாக, வனத்துறையினரால் வெளியிடப்பட்ட கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கியதோடு, வனத்துறையினர் மற்றும் மாணவ, மாணவியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட ஆமை மணற்சிற்பத்தினை பார்வையிட்டார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்களுடன்  மாணவ, மாணவியர்களும் கடற்கரையில் நெகிழி மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. குணால் யாதவ், இ. ஆ. ப. , உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. சுகாஷ் காடே, இ. ஆ. ப. , (கேரள மாநிலம்)  வனச்சரகர்கள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

 

Tags :

Share via