நட்சத்திர விடுதியில் ரகளை: வாலிபர் கைது

by Staff / 04-11-2023 01:38:11pm
நட்சத்திர விடுதியில் ரகளை: வாலிபர் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் குமார்(22), ஹெக்டர் சாலமன்(23) துனுதீன்(23), நண்பர்களான மூவரும், கடந்த 30ஆம் தேதி இரவு வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் பெண் தோழிகளும் செடன்றுள்ளனர்.பெண் தோழிகளுக்ககு, அங்கிருந்த சிலர் தொல்லை கொடுத்துள்ளனர். இதை, கார்த்திக்குமார், ஹெக்டர் சாலமன் ஆகியோர் தட்டிக்கேட்டு, விடுதி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். உடனே குகன் தரப்பை வெளியேற்றினர். ஆத்திரமடைந்த குகன் தரப்பினர், ஹோட்டல் வெளியில் பழித்தீர்க்க காத்து கிடந்தனர். விருந்து முடிந்து இவர்கள் மூவரும், வெளியில் வந்து, ராமா தெருவில் உள்ள கடை ஒன்றில் டீக்குடித்தனர்.

அங்கு வந்த குகன் தரப்பினர், எங்களையா அசிங்கப்படுத்தி ஹோட்டலை விட்டு வெளியேற்றினாய் எனக் கூறி, கத்தியால் கார்த்திக்குமாரை குத்தினர். தடுக்க வந்த ஹெக்டர் சாலமன் மற்றும் துனுதீனுக்கும் கத்தி குத்து விழுந்தது.தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், வழக்கு பதிவு செய்து சம்பவத்தன்றே மாணிக்க விக்னேஷ், ஜெப்ரீஷ், அரவிந்த், பிரகாஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். குகன் தலைமறைவாகி விட்டார்.அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நுங்கம்பாக்கம் பகுதியில் வைத்து, நேற்று கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via