சென்னையில் பைக்கில் சென்றவர் லாரி மோதி பலி

by Staff / 04-11-2023 03:38:04pm
சென்னையில் பைக்கில் சென்றவர் லாரி மோதி பலி

சென்னை மாதவரம் ராஜிவ் காந்தி 200 அடி சாலையில், நேற்று மதியம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, கோவிலுார் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி வேகமாக வந்த நிலையில் பைக் மீது மோதி சம்பவ இடத்திலேயே ரமேஷ் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து விசாரித்த போக்குவரத்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராகவேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via