மதுரை சித்திரை திருவிழா - பட்டாக் கத்தியுடன் இளைஞர்கள் மோதல்

by Staff / 23-04-2024 12:04:12pm
மதுரை சித்திரை திருவிழா - பட்டாக் கத்தியுடன் இளைஞர்கள் மோதல்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 23) காலை நடைபெற்றது. இந்த கண்கொள்ளா காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது, கூட்டத்தில் இளைஞர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஒரு இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து மற்ற இளைஞர்களை தாக்க முயன்றார். இதனைப் பார்த்த அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

 

Tags :

Share via