அண்ணியை கொலை செய்த கொழுந்தன்

by Staff / 15-03-2024 04:18:34pm
அண்ணியை கொலை செய்த கொழுந்தன்


கோவில்பட்டி அருகே எப்போதும்வென்றான் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவரின் மனைவி சின்னமணி (35). வைரமுத்து கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சின்னமணி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சின்னமணி அவரது கொழுந்தன் ராஜேஷ் கண்ணனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். மேலும் இதுபோன்று சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்துள்ளார். அதனை கைவிடுமாறு ராஜேஷ் கண்ணன் கூறியும் சின்னமணி கேட்காததால், எப்போதும்வென்றான் பேருந்து நிலையத்தில் தனது மகளுடன் நின்றுகொண்டிருந்த அவரை ராஜேஷ்கண்ணன் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via