ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ அபாயகரமான இடத்தில் இருந்து 1,500 பேர் வெளியேற்றம்
கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். வாலன்சியா ஒன்றியத்தில் உள்ள பகுதியில் திடீரென மின்னல் தாக்கி காட்டு தீ பற்றியது 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து 1,500 பேர் வெளியேற்றப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து தீ பரவி வருவதால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
Tags :