கணவரை அரிவாளால் வெட்டிய மனைவி
புதுக்கோட்டை: கீரனூர் சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (57). இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்திரா (50) கருவாட்டு வியாபாரம் செய்து வருகிறார். தம்பதியர் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சந்திரா, கணவர் சுப்பிரமணியை கருவாடு வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் கை, தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் சுப்பிரமணியை மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :