ஒடிசா காடுகளில் தென்பட்ட அரியவகை கரும்புலிகள்
ஒடிசாவின் சிமிலிபால் வனப்பகுதியில் கரும்புலி வலம்வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 'போலி மெலனிஸ்டிக்' புலிகள் என்று அழைக்கப்படுகின்றன. இதுகுறித்து ஒடிசாவில் பணியாற்றிவரும் IFS அதிகாரியான பர்வீன் கஷ்வான், டிசம்பர் 22 அன்று தனது ட்விட்டர் கணக்கில் 'இந்தியாவில் கரும்புலிகள்' என்ற தலைப்பில் அந்த புகைப்படங்களை பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது வெளியிடப்பட்டதிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் கருத்துகள் கிடைத்துள்ளன.
Tags :