இளம்பெண் எரித்துக் கொலை.. காதலன் பகீர் வாக்குமூலம்

by Staff / 24-12-2023 02:49:05pm
இளம்பெண் எரித்துக் கொலை.. காதலன் பகீர் வாக்குமூலம்

சென்னையில் மென்பொறியாளர் பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் காதலரான வெற்றிமாறனை (26) போலீசார் கைதுசெய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை நிராகரித்துவிட்டு, வேறு ஒருவரை காதலித்ததால் ஆத்திரத்தில் காதலியை கழுத்தில் சரமாரியாக குத்தினேன். வலி தாங்க முடியாமல் அவள் கத்தும்போது, கையோடு எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via