4 குழந்தைகள் உள்பட 6 பேர் குத்திக் கொலை
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் புதன்கிழமை இரவு ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இலங்கையை சேர்ந்த தர்ஷினி (35) என்ற பெண் அவரது 4 பிள்ளைகளும் மற்றும் மற்றொரு ஆண் என மொத்தம் 6 பேர் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டனர். தர்ஷினியின் கணவர் ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த படுகொலைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags :