காஷ்மீரில் பாஜக பிரமுகர்,மனைவியுடன்  சுட்டுக்கொலை

by Editor / 09-08-2021 07:28:33pm
காஷ்மீரில் பாஜக பிரமுகர்,மனைவியுடன்  சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் நகரில் கிராம அதிகாரியான குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவியை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.


குர்கானில் உள்ள ரெட் வாணி பாலா என்ற ஊரை சேர்ந்தவர் குலாம் ரசூல் அவரது மனைவி ஜாகிராபானு.
இருவரும் கிராம அதிகாரிகளாக வெவ்வேறு ஊர்களில் பணியாற்றி வருகிறார்கள் அனந்தநாக் நகரில் லால் சவுக் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் வசித்து வருகின்றனர்.


முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டல் அறையில் தங்கியிருந்தார்கள்.சொந்த வீட்டில் வசிக்க நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் சொந்த வீட்டுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டது.


இருவரையும் சுட்டுக் கொன்றது லஷ்கர்-இ-தொய்பா என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜயகுமார் தெரிவித்தார்.


குல்காம் நகரில் சுட்டுக் கொன்றனர். அந்த சம்பவத்தை ஒட்டி செய்தியாளர்களிடம் பேசிய லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தீவிரவாதிகளுக்கு இனி எந்த இரக்கமும் காட்டப் போவதில்லை என்று கூறினார்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து திங்கட்கிழமையன்று கிராம அதிகாரிகளான தம்பதியர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via