மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவர்

by Staff / 05-11-2023 04:04:45pm
மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள நங்கவள்ளி தானாவதியூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் விவசாயி இவரது மனைவி பூங்கொடி (58) இந்நிலையில் பூங்கொடி உறவினர்களான செல்வராஜ், விஸ்வநாதன் ஆகியோர் கூட்டு அனுபவத்தில் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை சண்முகம் யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டார் கடந்த 1ந் தேதி இதனை அறிந்த பூங்கொடி இதுகுறித்து தட்டிக் கேட்கவே அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் எரிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட பூங்கொடி அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து ஆத்திரமடைந்த சண்முகம் செல்வராஜ், விஸ்வநாதன் ஆகியோருக்கு சொந்தமான டூவீலர்களை பெட்ரோல் உற்றி தீ வைத்துக் கொளுத்தினர் இதில் இரண்டு டூவீலர்களும் கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து நங்கவள்ளி போலீசில் நேற்று முன்தினம் பூங்கொடி புகார் கொடுத்தார் அதன் பேரில் போலீசார் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via