கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு - துரை தயாநிதி நீதிமன்றத்தில் ஆஜர்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும் "ஒலம்பஸ்" கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரருமான துரை தயாநிதி மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.257 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2013 ஆம் ஆண்டில் துரை தயாநிதி உள்ளிட்ட 14 பேர் மீது கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் குறித்த மாவட்ட தனி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நீதிபதி ரபீக் முன்பாக துரை தயாநிதி இன்று நேரில் ஆஜராகினர்.
Tags : கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு - துரை தயாநிதி நீதிமன்றத்தில் ஆஜர்