சாலை தடுப்பில் மோதி இளைஞர் பலி

by Staff / 06-11-2023 01:51:00pm
சாலை தடுப்பில் மோதி இளைஞர் பலி

சென்னை மீஞ்சூர் பட்ட மந்திரி சாலையை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 31). இவர் செங்குன்றத்தில் லாரி புக்கிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இரவு பணி முடித்து நேற்று காலை சாலையில் மீஞ்சூர் வந்தபோது திடீரென அவரது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via