ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

by Editor / 14-11-2023 08:54:18am
ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர் குறிப்பாக மலைப்பாதை உள்ளிட்ட சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதவாறு அதிகளவு பனிமூட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கின்றனர் மேலும் இந்த கடுமையான பனிமூட்டம் காரணமாக மலை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக குளிரை சமாளிக்க தங்களது வீட்டில் முன்பு தீ மூட்டி வைத்து குளிர் காய்ந்து வருகின்றனர்.

 

Tags : ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

Share via