மறுகட்டுமான திட்டத்தில் 21 இடங்களில் வீடுகள்: அமைச்சர்

by Staff / 07-11-2023 01:05:42pm
மறுகட்டுமான திட்டத்தில் 21 இடங்களில் வீடுகள்: அமைச்சர்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் தா. மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில், அமைச்சர் வாரியத்தின் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ. 2, 400 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 30 திட்டப் பகுதிகளில் 7, 582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ. 1, 627. 88 கோடியில் 9, 522 வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டது.இதில் 21 திட்டப்பகுதிகளில் ரூ. 1, 330. 43 கோடியில் 7, 724 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 திட்டப்பகுதிகளில் 297. 45 கோடியில் 1, 798 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் 6 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 950 கோடியில் திட்டமிடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் திட்டப்பகுதியில் ரூ. 149. 32 கோடியில் 969 குடியிருப்புகளும், சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ. 130. 23 கோடியில் 900 குடியிருப்புகளும், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பகுதி திட்டப்பகுதியில் ரூ. 139. 80 கோடியில் 876 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via