மும்பை பெண்ணை கோவை வரவழைத்து பலாத்காரம்

by Staff / 12-01-2023 03:07:21pm
மும்பை பெண்ணை கோவை வரவழைத்து பலாத்காரம்

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த செந்தில்குமார் (24) மும்பையை சேர்ந்த 27 வயது பெண்ணுடன் முகநூல் மூலம் பழகி கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தனது காதலியை கோவைக்கு வரவழைத்து, ஆர்.எஸ். புரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து, திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண்ணிடம் இருந்து ரூ.70 ஆயிரத்தையும் பெற்றார். பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், அந்த பெண் மகளிர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via