ஓட்டப் பந்தயத்தில் சிறுவனுக்கு மாரடைப்பு

by Staff / 08-11-2023 04:56:06pm
ஓட்டப் பந்தயத்தில் சிறுவனுக்கு மாரடைப்பு

அமெரிக்காவில் ஓட்ட பந்தயத்தில் ஓடிய 14 வயது சிறுவன் திடீரென மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இளம் வயது மாரடைப்பு சம்பவங்கள் பல பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இது கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மேக்ஈவன் என்ற சிறுவன், 5 கி.மீ போட்டியில் கலந்து கொண்டு ஓடும் போதே மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via