டிசம்பர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது கந்தூரி விழா.

by Editor / 08-11-2023 11:29:26pm
டிசம்பர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது கந்தூரி விழா.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற சையது ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற உள்ளது.

டிசம்பர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் இவ்விழா டிசம்பர் 27ஆம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவு பெறும்.இதில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும்

இவ்விழாவில் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்களின் வருகை காணப்படும், சிங்கப்பூர், மலேசியா மற்றும்  ஸ்ரீலங்கா போன்ற வெளிநாட்டு பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும்.கந்தூரி விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா கமிட்டியினர் செய்து வருகின்றனர்

 

Tags : டிசம்பர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது கந்தூரி விழா.

Share via