75வது சுதந்திர தினம்- சென்னை காமராஜர் சாலையில் ரூ.1.83 கோடியில் நினைவு தூண்
ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ரூ.1.83 கோடியில் நினைவு தூண் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் 75-வது சுதந்திர தின நினைவு தூண் ரூ.1.83 கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் அறிவிப்பை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் நினைவுத்தூண் கட்டப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Tags :