அரசு விரைவு பேரூந்தில் பயணித்தால் 10 ஆயிரம் பரிசு..

by Editor / 01-02-2024 11:47:34pm
அரசு விரைவு பேரூந்தில் பயணித்தால் 10 ஆயிரம் பரிசு..

அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.10,000 பரிசு வழங்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டிருந்தது. இந்த ஜனவரி முதல் அறிமுகமானது. அதன்படி கடந்த மாதம் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் முன்பதிவு செய்து பயணித்தவர்களில் 3 பேரை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கணினி குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்தார்.வரும் நாட்களில் பொதுமக்கள் அரசு விரைவுபேரூந்துக்களை அதிகளவில் பயன்படுத்தவேண்டுமென்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : அரசு விரைவு பேரூந்தில் பயணித்தால் 10 ஆயிரம் பரிசு..

Share via