வாய்க்கொழுப்பு பிடித்த, பித்தம் தலைக்கேறிய ஆ.ராசா - இபிஎஸ் தாக்கு
வாய்க்கொழுப்பு பிடித்த, பித்தம் தலைக்கேறிய ஆ.ராசா, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பற்றி விமர்சனம் செய்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், 'எம்.ஜி.ஆர். மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நமது வளர்ச்சி பிடிக்காமல் தீய சக்திகள் பேசி வருகின்றனர். அதிமுகவின் வளர்ச்சி பிடிக்காமல் ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறார். அனைவரையும் வாழ வைத்த பெருமை நம் தலைவரை சாரும். கருணாநிதி குடும்பம் கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். அவர்கள் முரசொலி மாறன் தயாரிப்பில் 'எங்கள் தங்கம்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கருணாநிதியின் கடனை அடைத்து ஒளியேற்றியவர்' என்றார்.
Tags :