4 குழந்தைகளின் தாய் தற்கொலை
பெங்களூரில் வசித்து வருபவர் சாமூண்டேஸ்வரி. இவர் ஒரு அழகு நிலையத்தில் பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கு மல்லிகார்ஜூன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக சில புகைப்படங்கள் எடுத்துள்ள நிலையில் சாமூண்டேஸ்வரியிடம் 2 லட்சம் வேண்டும் என மல்லிகார்ஜூன் கேட்டுள்ளார்.அவர் கொடுக்க மறுக்கவே அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சாமூண்டேஸ்வரி தற்கொலை செய்துக் கொண்டார். இதுக்குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :