அடுத்தடுத்து ஆடியோவால் பரபரப்பாகும் சசிகலா! - கட்சியினர் கலக்கம்

by Editor / 05-06-2021 10:21:40am
அடுத்தடுத்து ஆடியோவால் பரபரப்பாகும் சசிகலா! - கட்சியினர் கலக்கம்

நம் கட்சி தொண்டர்களின் கட்சி, அதை சிலர் புரிந்துகொள்ளவில்லை என்று சசிகலா பேசியுள்ள 7ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது.

மதுரை சேர்ந்த அன்பழகன் என்பவர் சசிகலாவுடன் பேசும் ஏழாவது ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில், தொண்டர்களின் மனகுமுறல் கடிதம் மூலம் தெரிய வருகிறது என்றும், ஜெயலலிதா சொல்லியது போல 100 ஆண்டுகள் ஆட்சிக்கு இருக்க வேண்டும் என்பதை நான் கட்டி காக்க வேண்டும் அது தான் தன்னுடைய ஒரே எண்ணம் என்றும் சசிகலா பேசியுள்ளார்.

தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது என்று கூறும் சசிகலா, தைரியம் என்னுடன் பிறந்தது, நிச்சயம் வருவேன் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.ஏற்கனே சசிகலா தொண்டர்களிடம் பேசியதாக ஆறு ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. ஆனால் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்த பார்ப்பதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என உறுதிப்பட தெரிவித்தார்.

 

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சசிகலா அமமுக தொண்டர்களிடம் தான் பேசுகிறார், அதிமுக தொண்டர்களிடம் பேசவில்லை என கூறினார். அரசியலை விட்டு விலகியவர், ஏன் மறுபடியும் வருவதாக கூறுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

ஆனாலும் தொடர்ச்சியாக சசிகலா அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினரிடம் பேசிவரும் ஆடியோக்கள் வெளியாகி வருகின்றன.

 

Tags :

Share via