ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் : இடைக்கால தடை
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் இடங்கள், எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தரமோகன் ஆகியோர் சம்மனுக்கு இடைகால தடை விதித்தனர். மேலும் சம்மனுக்கு மட்டும் தான் தடை, விசாரணைக்கு தடையில்லை என்று கூறி டிச.21க்கு வழக்கை தள்ளிவைத்தனர்.
Tags :