38 பேரை பலி கொண்ட கோர விபத்து...

by Staff / 15-11-2023 03:12:07pm
 38 பேரை பலி கொண்ட கோர விபத்து...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 38 உயர்ந்துள்ளது. கிஷ்த்வாரிலிருந்து ஜம்முவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, 250 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகளை மேற்பார்வையிடும் தோடா மூத்த காவல் கண்காணிப்பாளர் அப்துல் கயூம் கூறுகையில், "இதுவரை குறைந்தது 38 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 17 பேர் பேருந்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தார். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

Tags :

Share via