தேசிய பத்திரிகையாளர்கள் தினம் முதல்வர் வாழ்த்து

by Staff / 16-11-2023 05:00:27pm
தேசிய பத்திரிகையாளர்கள் தினம் முதல்வர் வாழ்த்து

தேசியப் பத்திரிகையாளர்கள் தினத்தை ஒட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில், "உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்

 

Tags :

Share via