ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

by Staff / 27-11-2023 01:05:24pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

கர்நாடகாவின் தம்கூர் நகர் சதாசிவநகரை சேர்ந்த கரீப் சாப் (45) என்பவர் தனது மனைவி சுமையா, மகள் ஹாஜிரா, மகன்கள் சுபான், முனீர் ஆகியோருடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷிரா தாலுகா லக்கனஹள்ளியை சேர்ந்த இவர், தும்கூரில் தங்கி உள்ளார். தனது முதலாளி மற்றும் நான்கு பேர் தன்னையும் தனது குழந்தைகளையும் துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதனால் தான் தற்கொலை செய்வதாகவும் கரீப் சாப் கூறினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via