நீட் தேர்வு மாணவர் தற்கொலை
மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவர் ஃபரீத் ஹுசைன் (20), இவர் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்தார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தற்கொலைக்கு காரணம் நீட் படிப்பில் ஏற்பட்ட மன அழுத்தமா அல்லது குடும்ப பிரச்னையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு மட்டும் ராஜஸ்தானில் 28 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.
Tags :