நடுரோட்டில் பற்றி எறிந்த காரால் பரபரப்பு..

by Staff / 28-11-2023 04:18:45pm
நடுரோட்டில் பற்றி எறிந்த காரால் பரபரப்பு..

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சபரி; வக்கீல். இவர், விமான நிலையத்திற்கு தன் சகோதரருடன், நேற்று மாலை 'டாடா செஸ்ட்' காரில் புறப்பட்டார். பரங்கிமலை சுரங்கப்பாதையில் கார் சென்ற போது, முன்பகுதியில் இருந்து புகை வந்தது. சுதாரித்த இருவரும், காரில் இருந்து இறங்கினர். பின், காரின் முன்பகுதி, மளமளவென தீப்பிடித்து எரிய துவங்கியது. உடனடியாக அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அருகில் இருந்தோர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி, தீ அணைக்கப்பட்டது. முன்பக்க, 'பானட்' திறந்து பார்த்தபோது, 'பேட்டரி' எரிந்தது தெரிந்தது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via