வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கணவன்... மனைவி பரபரப்பு புகார்

by Admin / 30-07-2021 02:01:05pm
வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு பெண்களை படுக்கைக்கு அழைக்கும் கணவன்... மனைவி பரபரப்பு புகார்

 



கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவன், தன்னையும், பெற்றொரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதாகவும் ஆதாரங்களுடன் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பகுதியில் திவ்யாவுக்கும் மவுலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முத்துவுக்கும் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 12 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் 2019 ஆம் ஆண்டு தன் கணவருக்கு பல பெண்களுடன் தவறான பழக்கம் இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் இவர் 27-ஆம் தேதி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சிலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அந்த பணத்தை திருப்பித் தர முடியாத பெண்களை படுக்கைக்கு அழைத்துள்ளார். இவ்வாறு படுக்கைக்குச் செல்லும் பெண்களுடன் தனிமையில் இருப்பதை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார்.

கள்ளக்காதலி ஏஞ்சல் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். இதுகுறித்து கணவரிடம் கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் என்னையும் என் பெற்றோரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்.

இது போன்று பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் கணவர் மீதும் கள்ளக்காதலி ஏஞ்சல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தன் கணவரின் சகோதரர் செல்வம், அவரது அண்ணி விசாலாட்சி மற்றும் தாய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முத்துவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் சொத்து மொத்தத்தையும் எழுதி தரக் கோரி திவ்யா என்னை காரில் ஆட்களை வைத்து கடத்தி அடித்து சித்ரவதை செய்தார். இதுகுறித்து அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. திவ்யா சொல்வது அனைத்தும் பொய். தன் மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via