ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. முரசொலி நிலம் குறித்து பேசியதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் மீது முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலரான ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags :