மோசமான அனுபவம் - ஐயப்ப பக்தர்கள் கண்ணீர்

by Staff / 06-01-2024 05:27:20pm
மோசமான அனுபவம் - ஐயப்ப பக்தர்கள் கண்ணீர்

சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலை செல்லாமல் எரிமேலியில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் இருமுடி கழற்றி பக்தர்கள் விரதத்தை முடித்துள்ளனர். காவல்துறை கெடுபிடி காரணமாக ஐயப்பனை தரிசனம் செய்ய முடியாமல் திரும்புவதாக பக்தர்கள் கண்ணீர்மல்க வேதனை தெரிவித்துள்ளனர். விரதம் இருந்து வந்து ஐயப்பனை பார்க்காமல் செல்வது மனத்திற்கு வேதனையாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via