பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் ஓடுமா
ஜனவரி 9ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அரசு விடுத்த அழைப்பில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சிஐடியு உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர். எனவே பொங்கல் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் செய்வதறியாது திகைத்துவருகின்றனர். மேலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் பேருந்துகள் ஓடும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags :