நீதி நிலை நாட்டப்பட்டது ஆறுதல் அளிக்கிறது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

by Staff / 09-01-2024 12:08:38pm
நீதி நிலை நாட்டப்பட்டது ஆறுதல் அளிக்கிறது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் என்றும், அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via