மனிதநேயமிக்கச்செயல் கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷாவுக்கு சீமான் பாராட்டு

by Staff / 10-01-2024 01:19:11pm
மனிதநேயமிக்கச்செயல் கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷாவுக்கு சீமான் பாராட்டு

கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அறந்தாங்கி நிஷா மற்றும் பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மக்களின் அன்பையும், ஆதரவையும் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக்கொண்ட பெரிய செல்வந்தர்கள், உள்நாட்டு முதலாளிகள், பெருவியாபாரிகள், திரை பிரபலங்கள் பலரும் சமூகத்தில் தங்கள் உயர்வுக்குக் காரணமான அம்மக்களுக்கு நிகழ்ந்த இத்தனை பெரிய துயரத்தினைக் கண்டு, உதவிட சிறிதும் மனம் இரங்காத நிலையில் தம்பி பாலா, தங்கை அறந்தாங்கி நிஷா போன்றோரின் தன்னலமற்ற பரந்த உள்ளம் மிகுந்த போற்றுதற்குரியது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via