தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்: ராமதாஸ்

by Staff / 10-01-2024 04:29:40pm
தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான பகுதி அண்மையில் பெய்த மழையில் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. சாலையின் மேற்பரப்பு முற்றிலுமாக சேதமடைந்து விட்ட நிலையில் பல இடங்களில் ஓர் அடி ஆழத்திற்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சாலையில் செல்லும் இரு சக்கர ஊர்திகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாவது அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. ஆனாலும் சாலையை முழுமையாக சீரமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், நெடுஞ்சாலையை முழுமையாக சீரமைக்காமல் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய முடியாது. எனவே, போர்க்கால அடிப்படையில் செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் - வாலாஜா இடையிலான பகுதி கடுமையாக சேதமடைந்திருந்த நிலையில், அது முழுமையாக சரி செய்யப்படும் வரை அந்தப் பகுதியில் முழு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றார்.

 

Tags :

Share via