கர்ப்பிணி மனைவியை உயிருடன் எரித்த கணவர்

by Staff / 21-04-2024 12:54:22pm
கர்ப்பிணி மனைவியை உயிருடன் எரித்த கணவர்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர், தனது 6 மாத கர்ப்பிணி மனைவியை கட்டிலில் கட்டி வைத்து, உயிருடன் தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சுக்தேவ்வை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via