உதயநிதியை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

by Editor / 04-06-2021 07:21:29am
உதயநிதியை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்!

ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உனவுப் பொருட்கள் வழங்கப்படும் விவரத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் உதய நிதி ஸ்டாலினிடம் அளித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் Save Shakti-Sankalp Beautiful World-Pedigree India என்ற அமைப்பில் இணைந்து ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்து வருகிறார். இந்நிலையில் இப்போதைய ஊரடங்கு காலத்தில் 2 டன் உணவுப் பொருட்களை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. இது சம்மந்தமாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பு சம்மந்தமாக ‘Save Shakti-Sankalp Beautiful World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2டன் உணவு வழங்கபட்டு வருகிறது.இச்சேவையை அனைத்து தரப்புக்கும் கொண்டுசேர்க்க அதன் விவரத்தை Save Shakti அறக்கட்டளை நிறுவனர் வரலட்சுமி இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு நன்றி.வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via