மின்சாரம் பாய்ந்து சிபிசிஐடி தலைமைக் காவலர் உயிரிழப்பு

by Staff / 15-04-2024 12:26:07pm
மின்சாரம் பாய்ந்து சிபிசிஐடி தலைமைக் காவலர் உயிரிழப்பு

சிறுகமணி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவா் எம்.காா்த்திகேயன் (46). திருச்சியில் சிபிசிஐடி சிஐடி ஓசியு பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். புதிதாக வீடு கட்டி வந்த இவர், நேற்று  காலை மின் மோட்டாரை இயக்கி கட்டட வேலைக்காக தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் கசிந்து, கார்த்திகேயன் மீது பாய்ந்துள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காா்த்திகேயன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கார்த்திகேயனுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

 

Tags :

Share via