உக்ரைன் அதிபர் தகவல்
உக்ரைனில் 7-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்திய ரஷிய ராணுவம் சில இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு பின்வாங்காமல் உக்ரைன் இராணுவத்தினரும் எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த போரின் காரணமாக உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கெர்சான் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாக அம்மாகாண கவர்னர் கூறியுள்ளார்.
Tags :