தேர்தல் விதிகளை மீறியதாக 2.9 லட்சம் வழக்குகள் பதிவு

by Staff / 21-04-2024 12:56:54pm
தேர்தல் விதிகளை மீறியதாக 2.9 லட்சம் வழக்குகள் பதிவு

கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்து நேற்று வரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 661 புகார்கள் வந்துள்ளன. இதில் அங்கீகரிக்கப்படாத சுவரொட்டிகள் வைப்பு, சொத்துக் குவிப்பு, பணம் விநியோகம், மது மற்றும் பரிசு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இவற்றில், 2 லட்சத்து 6 ஆயிரத்து 152 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via