அதிமுகவின் எஃகு கோட்டை: செங்கோட்டையன்

by Staff / 21-01-2023 01:40:17pm
அதிமுகவின் எஃகு கோட்டை: செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என நிருபிக்க வேண்டியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.98.5 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமி பின்னால் இருக்கிறோம். இது மாற்றத்திற்கான தேர்தல். இது அதிமுகவிற்கு கிடைத்த வாய்ப்பு. இதில் வெற்றி பெற்றால் யாரலும் அதிமுகவை வெற்றி பெற முடியாது என்றாகிவிடும் என்றார். ஈரோட்டில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத காரணத்தால் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி திமுக அரசை கலைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags :

Share via