முதல் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

by Editor / 24-07-2021 04:56:55pm
 முதல் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி


இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஷிகர் தவான் தலைமையில் இலங்கை சென்றுள்ள இந்தியாவின் 2ம் தர கிரிக்கெட் அணி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடுகிறது. இதன்படி இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்டிகை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அவிஷ்கா (32) மற்றும் மினோத் (27) ரன்களின் ஆட்டமிழந்தனர். இதன்பின்பு ஆடிய பனுகா 24 ரன்களுக்கும், தனஞ்ஜெயா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


இதனால், இலங்கை அணி 25 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து திணறியது. எனினும், அடுத்து விளையாடிய சரித் 38, தசுன் சனகா 39 ரன்கள் எடுத்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். அதன்பின் வந்த வனின்டு 8 ரன்களில் வெளியேறினார்.இசுரு 8 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். சமிகாவுடன் இணைந்து ஆடிய துஷ்மந்தா சமீரா 13 ரன்களில் ரன்அவுட் ஆனார். ஒரு முனையில் அடுத்து விக்கெட்டுள் இழந்த நிலையிலும் மறுமுனையில் ஆடிய சமிகா கருணாரத்னே அதிரடியாக விளையாடி 2 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 262 ரன்களை எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், தீபக் சஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகள், குருணல் பாண்ட்யா மற்றும் ஹர்தீக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


இந்திய அணி வெற்றி பெற 263 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தவான் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிருத்திவி ஷா 43 ரன்களில் வெளியேறினார். அதன்பின் களம் இறங்கிய இஷான் கிஷன் (59), மணீஷ் பாண்டே (26) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் 2 விக்கெட்டுகள் வீழ்த்த போதும் மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த கேப்டன் தவானுடன் இணைந்து விளையாடிய சூர்ய குமார் யாதவ் ஆகிய இருவரும் இந்திய வெற்றிக்கு வழிவகுத்தனர்.இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்களை எடுத்துள்ளது.

இதனால், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. சூர்ய குமார் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் தவான் 86 (95 பந்துகள் 6 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் ஆவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இலங்கையின் தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகளும், லக்ஷன் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.


இப்போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடித்து 59 ரன்கள் குவித்தார். ஒருநாள், டி20 கிரிக்கெட் இரண்டிலும் அறிமுக போட்டியில் 50 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய வீரராக இஷான் கிஷன் திகழ்கிறார்.

 

Tags :

Share via