பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார்..

by Editor / 29-03-2023 09:39:28pm
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார்..

 பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார். சென்னை விமானநிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா, சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை,செங்கோட்டை-தாம்பரம் வாராந்திர புதிய ரயில் சேவை  துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.அன்று ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.


மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அதே நிகழ்ச்சியில் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஜெயின் கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ஏப்ரல் 8-ந்தேதி இரு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி அன்று இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்குவார் என தெரிகிறது.

 அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்தித்து பேச முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றனபிரதமர் சென்னை வருவதையொட்டி விமான நிலையம், விழா மைதானம் என பிரதமர் செல்லும் வழி நெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்

 

Tags :

Share via