பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 20-03-2023 11:10:27am
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

மதுரை திருப்பரங்குன்றம் அருகே சூரக்குளத்தை சேர்ந்தவர் பழனியம்மாளின் பேத்தி பிரியா (14). 10-ம் வகுப்பு மாணவியான இவர் படிக்கச் செல்வதாக கூறி பிரியா வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கீழே இறங்கி சாப்பிட வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் பழனியம்மாள் மாடிக்கு சென்று அவரது பேத்தி பிரியாவை பார்க்க சென்றார். அப்போது சேலையில் தூக்குப்போட்டு பிரியா தூக்கிட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via